தெஹிவளை பகுதியில் முதிய நபர் ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (19.04) தெஹிவளை பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஏப்ரல் 17ம் திகதி தெஹிவளை வைத்தியசாலை வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 74 வயதான நபர் ஒருவர் தரையில் தள்ளப்பட்டு, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரூ. 2,100 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தினர்.
பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 5,200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்ட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 23 வயதான தெஹிவளை பகுதியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.