தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவிருப்பதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள் பொய்யானவை என பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார்.
ஏரிசக்தி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள குமார ஜெயகொடி, எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்யவிருப்பதாகவும், அவரது ராஜினாமாவுக்குப் பிறகு அப்பதவி வெற்றிடத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் துயகொந்த நியமிக்கப்படுவார் என்றும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறான செய்திகள் போலியானவை என ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் தெரிவித்துள்ளார்.