ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தைகள் குறித்து நிலவும் அனிச்சைத்தன்மை காரணமாக உலக எண்ணெய் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன.
இன்று (20.04) ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் 7%க்கும் அதிகமாக உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் விலை ஒரு கலனுக்கு 94.69 அமெரிக்க டொலராக தளர்ந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமை காணப்பட்ட 90.40 டொலருடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க உயர்வாகவே உள்ளது.
இந்த விலை உயர்வு, டிரம்ப் அறிவித்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்டது. அதில், தடையை தவிர்க்க முயன்றதாக கூறப்படும் ஈரான் கொடியுடன் பயணித்த சரக்கு கப்பலை அமெரிக்க படைகள் கைப்பற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னேற்றம், இரு நாடுகளுக்கிடையிலான புதிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் வாய்ப்புகளை மேலும் குழப்பமடையச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.