இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை சந்திதாக கூறியுள்ளார்.
இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள், உலகளாவிய நிலைமைகள் மற்றும் அவை வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், மேலும், இந்தியா – இலங்கை உறவுகள் மற்றும் தொடர்ந்துவரும் ஒத்துழைப்புகள் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.