மக்கள் விடுதலை முன்னணி இன்று (24/12) நாட்டின் சில பிரதான நகரங்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு,அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் உரப் பிரச்சினை என்பனவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, பாணந்துறை, காலி, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், சிலாபம், ரிக்கிலகஸ்கட, பூண்டுலோயா, கதுருஓயா மற்றும் திருகோணமலை முதலான பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.