பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் இணைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.