மீண்டும் பணத்தை அச்சிட மத்திய வங்கி நடவடிக்கை

இலங்கை மத்திய வங்கி 202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு நேற்று (29/12) நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அதில் 33.5 பில்லியன் பெறுமதியான முறிகளையே விற்பனை செய்ய முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வட்டி விகிதம் மற்றும் நாணய மாற்று விகிதத்தை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி W.A விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மீண்டும் பணத்தை அச்சிட மத்திய வங்கி நடவடிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version