ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பரிமாற தடை

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது கருத்துகளை பரிமாறிக் கொள்ளவோ முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் குழுவொன்று வழங்கிய கருத்துப் பரிமாற்றம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் பெண்ணொருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பரிமாற தடை

Social Share

Leave a Reply