எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு

எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும் என, மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபை சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் விஜயலால் இதனை தெரிவித்துள்ளார்.

அதனால் நாட்டு மக்கள் இருளில் இருப்பதற்கு தயாராக வேண்டும் எனத் தெரிவித்த அவர், எரிபொருள் இறக்குமதி நெருக்கடியின் காரணமாக மின் உற்பத்திக்கும், மின் விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் இரண்டாவது தடவையாகவும் மூடப்பட்டுள்ளது. அத்துடன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கவில்லை.

தொழிற்சங்கத்தினரது ஆலோசனைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவே தற்போது மின் விநியோகத் தடைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு

Social Share

Leave a Reply