கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுகிறது

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வருகையை தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று (09/01) திறக்கப்படவுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 18 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் நேற்று (08/01) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தனர்.

இலங்கை – சீனாவின் 65 வருடகால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அவரது விஜயம் அமைந்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதியான நடைப்பாதை திறப்பு விழா இன்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தலைமையில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுகிறது

Social Share

Leave a Reply