‘பணத்தை அச்சிடுவதால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது’

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்துள்ள சேதத்தை பணத்தை அச்சிடுவதன் மூலமோ, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பதவிகளில் இருந்து நீக்குவதன் மூலமோ சரி செய்ய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று (10/01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘உலகின் 184 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தில் அங்கம் வகிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல், வாங்கல் செய்த எந்த நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்ததில்லை. ஏதாவது ஒரு நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருக்குமாயின் அதற்கு காரணம் சர்வதேச நாணய நிதியமல்ல.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாது, வட்டி முதலாளிகளின் பின்னால் சென்றமையே அதற்கு காரணம், கடந்த 73 ஆண்டுகளில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் 16 முறை சென்றுள்ளது’ எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

'பணத்தை அச்சிடுவதால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது'

Social Share

Leave a Reply