‘வீடற்றவர்களுக்கு வீடுகள்’

இலங்கையில் முறையான வீடின்றி வாழும் மக்களுக்கு வீடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (16/01) இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த சில்வா இதனைத் தெரிவித்தார்.

‘உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ், கொலன்னாவை பகுதியில், அடிக்கல் நாட்டப்பட்டு 43 நாட்களில் உரியவர்களுக்கான வீடுகள் கையளிக்கப்பட்டன.

இந்நிலையில் முறையான வீடுகளின்றி வசித்து வரும் ஏனையவர்களுக்கும் வீடமைப்பு திட்டம் ஒன்றை ஏற்படுத்தி, அவர்களுக்கான வீடுகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

‘வீடற்றவர்களுக்கு வீடுகள்'

Social Share

Leave a Reply