ஜனாதிபதியை IMF பிரதிநிதிகள் சந்தித்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சாங்யோங் ரீ (Changyong Rhee), பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏன்-மெரீ கல்டே-வூல்ஃப் (Anne-Marie Gulde-Wolf) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி டுபாகஸ் பெரிடானுஸெட்யாவான் (Tubagus Feridhanusetyawan) ஆகியோர் ஜனாதிபதியினை சந்தித்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்ததாக அறிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதனையும் அறிவிக்கவில்லை.

ஜனாதிபதியை IMF பிரதிநிதிகள் சந்தித்தனர்

Social Share

Leave a Reply