இலங்கையில் அதிரடியாக முடக்கப்பட்ட மற்றுமொரு சமூக ஊடகம்

லங்கையில் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மற்றைய ஒரு சமூக ஊடகமான டிக்டோக்(Tiktok) தற்பொழுது அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சில சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை முதல் டிக்டோக் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையிலேயே தற்போது இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply