மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு, வந்தாறுமூலை, டயமன் விளையாட்டுக்கழக மைதானம் கையளிக்கும் நிகழ்வில் இன்று(23.09.2020) தேசிய இளைஞர், விளையாட்டுதுறை மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கலந்துகொண்டார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விரைவாக நடடிக்கையெடுத்து வருவதாகவும் அவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் குறித்த நிகழ்வில் உறையாற்றிய நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ராஜபக்ஷ குடும்ப பெயர்களைப் யன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. எந்தவொரு நிலையிலும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கம் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது அரசாங்கத்திற்கு தேவையற்றவிதத்தில் இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்கப்படவேண்டியஅவசியமில்லை. தேரியாமல் செய்த குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்யநடவடிக்கையெடுக்கப்படும். இளைஞர்கள் நாட்டின் பெறுமதிளான சொத்துக்கள்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் அதிகமான விடயங்களைச் செய்யமுடியவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல விடங்களைப் பின்பற்ற வேண்டும்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையில் இதுவரை 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்கப்படும்.
முகநூலில் புகைப்படங்களை பதிவிட்ட குற்றங்களுக்காக பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நீதித்துறையுடன் பேசி முயற்சிகள் முன்னெடுக்கப்படும். குறித்த கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன இணைக்க நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ராஜபக்ஷ குடும்ப பெயர்களைப் யன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. எந்தவொரு நிலையிலும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கம் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எமதுஅரசாங்கத்தினைக் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதானாலோ ஊடகவியலாளர் சந்திப்புகள் நடத்துவதாலோ எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை.
சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் தெரியவந்தால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுங்கள் அவ்வாறான நிலையில் சாட்சியமளிக்க நாங்களும் வருகிறோம். எமக்கு எதிராக கூச்சலிடுவது பொலிஸாரின் புத்தகங்களில் பதியப்படுவதில்லை. சட்டரீதியன நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முனவரவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரகளான் சதாசிவம் வியாழேந்திரன், தேனுக விதானகே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அகமட்,அரசாங்க அதிபர் எஸ்.கருணாகரன், மேலதிக அரசாங்கஅதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

????????????????????????????????????