கொழும்பு – மட்டக்களப்பு புகையிரதத்தின் கழிவறையில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (10.03) இரவு 7.00 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து குழந்தை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.