இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவரான தந்தை செல்வாவின் 46வது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள அவரது சிலையருகே இடம்பெற்றிருந்தது.
இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் நா. சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.