மனைவியை தீயிட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சேதவத்தை பிரதேசத்தை சேர்த்த தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொண்டு, மனைவியையும் கட்டியணைத்துள்ள சம்பவம் கடந்த 24ம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 44 வயதான சம்பவத்தில் காயமடைந்த பெண் நேற்று (30.04) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் கணவர் (54) வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.