விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரை ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு தலா ஒரு மூட்டை யூரியா உரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் தற்போது 07 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹெக்டேருக்கு 20,000 ரூபா வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply