நியூசிலாந்து மகளிர் அணிக்கு வெற்றி

இலங்கை மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இன்று (08.07) பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றது. இதில் விஷ்மி குணரட்ன 26(28) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் எடன் கார்சன், லெய்ஹ் காஸ்பெரெக், அமெலியா கேர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றது. இதில் சூசி பேட்ஸ் 44(47) ஓட்டங்களையும், அமெலியா கேர் 34(28) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இனோஷி ப்ரியதர்ஷானி 3 விக்கெட்களையும், கவிஷா டில்ஹாரி, உதேஷிகா ப்ரபோதனி ஆகியோர் தல ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகியாக சூசி பேட்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது போட்டி நாளை மறுதினம் சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளை பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிட முடியும்.

Social Share

Leave a Reply