அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – சமன் ரத்னப்பிரிய!

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை. 2024 ஆம் ஆண்டின் முதல் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும். அதற்காகத்தான் நாங்கள் தயாராகி வருகிறோம்.

தேர்தல் நடத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் நாங்கள் பரிந்துரைக்கிறோம். பொதுவாக உலகில் ஒரு நாடு வீழ்ந்தால் எதிர்கட்சி தலைவர் பதவி ஏற்பார் ஆனால் இலங்கையில் , பொறுப்பேற்க முதுகுத்தண்டுள்ள எதிர்கட்சித் தலைவர் இல்லை.அதனால்தான் பயம் ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply