தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (26.09) நல்லூரில் அமைந்துள்ள திலீபனி்ன் நினைவிடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்துக்கொண்டனர்.

இதேவேளை திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருகோணமலை துறைமுக பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டான் மண்டபம், காந்தி சுற்றுவட்டம் மற்றும் திருகோணமலை பொலிஸ் பிரதேசம் ஆகிய இடங்களில் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள், அணிவகுப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply