கராபாக் எரிபொருள் கிடங்கில் வெடி விபத்து -20 பேர் பலி!

அஜர்பைஜானின் நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக ஆர்மேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 300 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் டஜன் கணக்கானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெடிவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை. இந்நிலையில் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply