கத்தியால் குத்தி இளைஞன் கொலை – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து 24 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ குணானந்த மாவத்தை பகுதியிலேயே நேற்று (09.10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட இளைஞன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் ஸ்ரீ குணானந்த மாவத்தை பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும், குறித்த நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட கையடக்க தொலைபேசி தொடர்பான வாக்குவாதம் முற்றியதில், சந்தேக நபர் கத்தியால் இளைஞனின் முதுகில் குத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த சந்தேகநபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply