சீரற்ற காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகிஸ்வர தெரிவித்துள்ளார்.
உடவலவ நீர்த்தேக்கத்தில் ஐந்து வான் கதவுகள் தலா ஒரு அடி அளவில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த நீர்த்தேக்கங்களை அண்மித்த மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயா மற்றும் நில்வலா ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆறுகளை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.