இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மோகன் டி சில்வா அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வாவிடம் இன்று (04.11) காலை சமர்ப்பித்ததாக இலங்கை கிரிக்கட் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோகன் டி சில்வா தற்போது மோசமான உடல்நிலை காரணமாக அவுஸ்திரேலியாவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதன் காரணமாக அவர் பதவி விலக தீர்மானித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி பாரிய தோல்வியை சந்தித்ததை அடுத்து, இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.