நாடாளுமன்றத்தின் சிக்கல்களை ஆராயும் குழு இன்று கூடுகிறது!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று (06.11) கூடவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் இன்று இந்தக் குழு முன்னிலையில் அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைவராக செயற்படும் இந்தக் குழுவுக்கு இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற தீர்மானிக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் தலதா அத்துகோரள ஆகியோரை இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply