இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான 20-20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றுப்பெற்றுள்ளது. பெங்களூரில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ஷ்ரேயஸ் ஐயர் 53 ஓட்டங்களையும், அக்ஷர் பட்டேல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜேசன் பெஹ்ரன்டோப், மற்றும் பென் டுவார்ஷிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
161 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பென் மக்டெமோட் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நேற்றைய வெற்றியை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட 20-20 தொடரை நான்கிற்கு ஒன்று என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.