எதிர்வரும் திங்கட்கிழமை (18.12) சதொச நிறுவனத்திற்கு 15 மில்லியன் முட்டைகளை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக அரச இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளையே இவ்வாறு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்துக்கு தேவையான 15 மில்லியன் முட்டைகள் நாளை (17.12) நாட்டிற்கு கொண்டு வரப்படும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் சந்தைக்கு விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.