யாழில் டெங்கு காய்ச்சலினால் 11 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் தாவடியை பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.