அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அறிவிப்பு..!

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இதற்கு மத்தியக்குழுவும் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply