ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுவிட்சர்லாந்திற்கு 12 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்று அதிகாலை பயணித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டினையடுத்து, பிளவுபடாத நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி உகாண்டாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.
இதற்கமைய, இந்த மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை உண்டாவில் இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பல அமைச்சர்கள் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.