சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதிக்கு இன்று (6.2.2024) அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பதவி விலகியுள்ளார்.
குற்றச்செயல்கள் குறித்து விளக்கமறியலில் உள்ள ஒருவரை தொடர்ந்தும் எவ்வாறு அமைச்சரவையில் வைத்திருக்க முடியும் என பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அவர் இன்று பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.