தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிலிருந்து 3 அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளனர்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, பதவி விலகல் கடிதத்தை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சுபுல் விஜேசிங்க மற்றும் வைத்தியர் பிரியந்த சேரசிங்க ஆகியோரும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.