வவுனியா பாடசாலையொன்றில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

வவுனியா, மடுகந்த தேசிய பாடசாலை மைதானத்தில் ஏழு மோட்டார் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்.

தெரிவித்துள்ளனர்.பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் போது நிலத்தடியிலிருந்து வெடிக்காத 81 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இவை யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.மோட்டார் குண்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாகவம் அவை வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply