ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதான தேர்தல்கள் இரண்டையும் பிற்போடுவதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை பசில் ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.