கொழும்பு பொரலஸ்கமுவ பகுதியில் உடற்பிடிப்பு நிலையத்திற்கு சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனமடைந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.