சுற்றுலாப் பயணிகளின் வருகையில் திடீர் மாற்றம் 

இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களுக்குள் 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களுக்குள் 50,537 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 9ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 686,321 சுற்றுலாப் பயணினள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 45% அதிகரித்துள்ளது. 

Social Share

Leave a Reply