தமிழ் வேட்பாளர் தேவையில்லை – செந்தில் 

ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply