காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இரண்டு தேசிய வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராபிட்டிய வைத்தியசாலை அமையவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.