இலங்கையில் பாதாள குழுக்களுடன் தொடர்புடைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 167 நாட்களில் 200 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
201 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி 5.434 பில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் போதைப்பொருளுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டது.