பிபில – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பலி

பதுளை, பிபில – மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

வாகம பகுதியில் இன்று (12.06)இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேன் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply