குளவி கொட்டுக்கு இலக்கான மாணவனின் நிலைமை கவலைக்கிடம்

அனுராபுரம்,கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 35 பேர் கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மேல் காகம வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்குள்ளான மாணவர் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் குறித்த மாணவன்
மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply