ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளாளர்.

கொழும்பில் இன்று (25.07) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டில் நீண்டகாலமாக உள்ள மோசமான அரசியல் கலாசாரத்தை கருத்திற் கொண்டு தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் விஜயதாச ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னதாகவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையிர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளாளர்.

Social Share

Leave a Reply