குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

திடீர் தடங்கல் காரணமாக மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகின்றது.

வத்தளை, மாபோல, ஜாஎல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ நகர சபைக்குப்பட்ட பகுதிகள், வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவங்கொடை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனத் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர் விநியோகத்தை இன்று(22.10) நண்பகல் 12 மணி அளவில் வழமைக்குக் கொண்டுவர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply