கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்படலாம் எனும் அச்சத்தின் காரணமாக அறுகம்பை பகுதிக்குப் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் பயண ஆலோசனையின்படி, அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.