சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் இலங்கை

சுற்றுலாப் பயணிகளை அழைக்கும் இலங்கை

எதிர்வரும் காலத்தில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் தங்கியுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு பேணப்படும் என்றும் அந்த அறிவிப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இலங்கை சுற்றுலாத்துறைக்கு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply