இலங்கை இராணுவ தலைமையகம் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை

இலங்கை இராணுவ தலைமையகம் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை

இராணுவத்தின் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை இராணுவ தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, பொறுப்பற்ற வகையில் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சிலர் போலி தகவல்கள் அடங்கிய காணொளியைப் பதிவேற்றியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரதிபலன்கள் மற்றும் ஊடக நெறிமுறைகளுக்கு முரணான இவ்வாறான போலியான தகவல்களின் ஊடாக மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply