பொலிஸாரால் லொறி மீது துப்பாக்கிச் சூடு

பொலிஸாரால் லொறி மீது துப்பாக்கிச் சூடு

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ நோக்கிப் பயணித்த லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸார் தெரிவித்த போதும், லொறியை நிறுத்தாமல் சென்றமையால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, சாரதி லொறியை நிறுத்தியுள்ளார். இதன்போது, லொறியின் சாரதி சூரியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த லொறியில் 17 மாடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.

Social Share

Leave a Reply