நெல்லுக்கான விலையை நிர்ணயித்த அரசாங்கம்

நெல்லுக்கான விலையை நிர்ணயித்த அரசாங்கம்

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, அரசாங்கம் புதிய விலைகளை நிர்ணயித்துள்ளதாக
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து இன்று (05.02) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர்,

“நாங்கள் உலர் நெல்லினையே கொள்வனவு செய்வோம். நாட்டரிசி நெல் ஒரு கிலோ கிராமை சந்தைப்படுத்தல் சபை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும்.
ஒரு கிலோ கிராம் சம்பா நெல் 125 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும்.

அத்துடன் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா நெல் 132 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும்

அரிசியின் விலை குறித்து சிந்தித்தும், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளையும் கருத்திற்கொண்டும் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Social Share

Leave a Reply